Thursday, November 17, 2011

Appan Endrum Lyrics-Guna

அப்பனென்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
ஒட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு..
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு..
அது புத்தனென்றும் சித்தனென்றும் பித்தனென்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு..
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு..
பந்த பாச சேற்றில்.. வந்து வீழ்ந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில்.. இந்த அழுக்கு போகும்
அப்பனென்றும்..

அப்பனென்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
ஒட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு..
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு..

குற்றம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
சிவனை கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கெட்ட மூடர்க்கென்றும் ஞான பார்வை ஏதடா
ஆதி முதல் அந்தம் உன் சொந்தம், உன் பந்தம்,
நீ உள்ளவரைதான்..
வந்து வந்து கூடும் கூத்தாடும், விட்டோடும்,
ஒர் சந்தை கடைதான்..
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டு தள்ளு
அப்பனென்றும்..

அப்பனென்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
ஒட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு..
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு..

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடி போனதாரடா
தட்டு கேட்டு ஓடும் தள்ளாடும், எந்நாளும்,
உன் உள்ளம் குரங்கு..
கட்டுப்பட கூடும் எப்போதும், நீ போடு,
மெய்ஞான விலங்கு..
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக அங்ஞானம் அற்று விழும்..
அப்பனென்றும்..

அப்பனென்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
ஒட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு..
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு..
அது புத்தனென்றும் சித்தனென்றும் பித்தனென்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு..
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு..
பந்த பாச சேற்றில்.. வந்து வீழ்ந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில்.. இந்த அழுக்கு போகும்
அப்பனென்றும்..

அப்பனென்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
ஒட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு..
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு..
அது புத்தனென்றும் சித்தனென்றும் பித்தனென்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு..
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு..

No comments:

Post a Comment