ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன்பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே
அம்மாவும் அப்பாவும்
எல்லாமே நீதானே
என் வாழ்கை உனக்கள்ளவா
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என்வாசம் உனக்கள்ளவா
அன்பென்ற ஒற்றைச்சொல்லை
போலன்று வேறில்லை
நீ காட்டும் பாசத்துக்கு
தெய்வங்கல் ஈடுஇல்லை
என் நெஞ்சம்
உன்னைமட்டும்
கடிகாரம் முள்ளாய் சுற்றும்
நொடிநேரம் நீ பிரிந்தால்
அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையும் செய்வேன்
தலை ஆட்டும் பொம்மைஆவேன்
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என்வாசம் உனக்கள்ளவா
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன்பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே
தஜ்மஹால் உனக்கு
ரத்தத்தில் கட்டபோறேன்
மேகத்தில் நூல் எடுத்து
சேலையாக செஞ்சு தாரேன்
என்னோடு நீ இருந்தால்
வேறேதும் இடகுமா
கண்டாங்கி சேலை போதும்
வேறேதும் நான் கேட்பேனா
வானத்தில் நீளம் போலே
பூமிக்குள் ஈரம் போலே
எரித்தாலும் பிரியாது
முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா.
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன்பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே..!
No comments:
Post a Comment